Navagraha Sthalams


Navagraha Temples are collection of nine temples where the Navagrahams (9 planets) got their papavimochanam (forgiven from sins) from the Great Supreme power Shiva.

In Hindu mythology it is believed that there are 9 planets that decide the good and bad time of everyone’s life. And for each planet we have a temple in Tamil Nadu. These 9 temples are basically Shiva temples where the particular graham is supposed to have got Arull (Blessings) from Shivaperuman.

So if these temples are worshipped with sincere devotion towards the great Lord Shiva. It is for sure that the dhoshams (troubles) caused by the grahams will go away like melting ice in sun.

These temples are available in and around Kumbakonam.
#
Temple name
Gragam
1
Suriyanar Koil
(Sun) Suriyan
2
Thingalur
(Moon) Chandran
3
Vaitheeswaran Koil
(Mars) Sevvai
4
Thiruvenkadu
Bhudan
5
Alangudi
Guru
6
Kanjanur
Velli
7
Thirunallar
Sani
8
ThiruNakeswaram
Ragu
9
Kezha Perumballam
Kedhu

It is believed that if one reads the "Kolaru Thirupadigam" of Thirugnanasambandar they are relieved from the dhoshams and bad effects of navagrahams.

Kolaru Thirupadigam: கோளாறு திருப்பதிகம் 
பண் - பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்
919
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் 
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் 
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி 
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
01
920
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க 
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் 
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் 
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
02

921
உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து 
உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் 
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி 
திசை தெய்வ மானபலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
03
922
மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து 
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் 
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் 
கொடுநோய்க ளான பலவும்
அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
04
923
நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும் 
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் 
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு 
மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
05
924
வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் 
மடவாள் தனோடு முடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் 
உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் 
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
06
925
செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக 
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் 
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் 
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
07
926
வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து 
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் 
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் 
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
08
927
பலபல வேடமாகும் பரனாரி பாகன் 
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென் 
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் 
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
09
928
கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு 
குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென் 
உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல் 
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
10
929
தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து 
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து 
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.
11
திருச்சிற்றம்பலம்

இப்பதிகம் பாண்டிநாட்டுக் கெழுந்தருளியபோது அருளிச்செய்தது.


Note: It is very painful to see the devotees giving importance only to the navagraha deity in the temple and worshipping only them ignoring the great and main deity Lord Shiva.  When the navagrahas themselves got papavimocham from God why not the devotees?  This blog requests everyone who would like have dhosha nivarthi of navagrahams to do the main pooja to Shivaperuman first and then to the navagrahams for best results. Namasivayam!!!

Temple Map & Details



No comments:

Post a Comment